தேர்வர்களுக்கு எந்த வகையிலும் குழப்பம் இல்லாமல் விடைத்தாள் நிரப்பும் வகையில் மிகவும் எளிமையான மற்றும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் அனைத்து தேர்வுகளிலும் இந்த முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் விடைத்தாளை பூர்த்தி செய்யும் பணி மிகவும் எளிதானதாக இருக்கும்.
மேலும் தேர்வுக்கான முடிவுகள் தாமதமின்றி விரைவாகவும், எவ்வித குழப்பமும் இன்றியும் வெளியிட வேண்டும் என்பதில் டிஎன்பிஎஸ்சி மிகவும் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.