இந்தப் பயிற்சி 12 மாதங்கள் நீடிக்கும். பயிற்சிக் காலத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். வருகைப்பதிவு மற்றும் நடத்தை அடிப்படையில் நிறுவனம் சார்பில் ரூ.500 வழங்கப்படும். அதே நேரத்தில் அரசாங்கம் பயிற்சி பெறுபவரின் வங்கிக் கணக்கில் ரூ.4,500 செலுத்தும். கூடுதலாக, ஆண்டு இறுதியில் ரூ.6,000 ஒருமுறை வெகுமதியாக வழங்கப்படும்.