இதன் தொடர்ச்சியாக மேலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடப்பிரிவுகளுக்கு 306 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு ஆணையிடப்பட்டது. இத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட பணியிடங்கள் சேர்க்கை பெறாத 120 பணியிடங்களும் சேர்த்து ஆகமொத்தம் 426 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப்பிரிவுகளுக்கு நிரப்பப்படவுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் https://www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்வு
மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் வாயிலாக இன்று (04.02.2026) முதல் 09.02.2026 வரை தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவு செய்யப்படுவர்' என்று கூறப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
தமிழக அரசு அறிவித்துள்ள தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தமிழக கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் tngasa.in அல்லது dce.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றை சரியாக பதிவிட வேண்டும். புகைப்படம், கையொப்பம் மற்றும் கல்விச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டியது இருக்கும். இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.