அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ!

Published : Feb 04, 2026, 07:52 PM IST

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு எப்படி விண்ணபிப்பது? என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
12
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

அரசு கலை மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிவிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க 2025-26ஆம் கல்வியாண்டிற்கு பாடப்பிரிவுகளில் 15,000க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப்பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டன.

தமிழக அரசின் அறிவிப்பு

மேலும், ஏழை எளிய மாணாக்கர்களின் உயர்கல்வித் தேவையினை பூர்த்தி செய்ய 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. 

கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த இயலாத நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க மாணாக்கர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க முதற்கட்டமாக 574 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தவும் பின்னர், 823 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தவும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, தற்காலிகமாக 1,277 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

22
426 விரிவுரையாளர் பணியிடங்கள்

இதன் தொடர்ச்சியாக மேலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடப்பிரிவுகளுக்கு 306 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு ஆணையிடப்பட்டது. இத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட பணியிடங்கள் சேர்க்கை பெறாத 120 பணியிடங்களும் சேர்த்து ஆகமொத்தம் 426 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப்பிரிவுகளுக்கு நிரப்பப்படவுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் https://www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்வு

மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் வாயிலாக இன்று (04.02.2026) முதல் 09.02.2026 வரை தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவு செய்யப்படுவர்' என்று கூறப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

தமிழக அரசு அறிவித்துள்ள தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தமிழக கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் tngasa.in அல்லது dce.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக சென்று விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றை சரியாக பதிவிட வேண்டும். புகைப்படம், கையொப்பம் மற்றும் கல்விச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டியது இருக்கும். இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories