ரூ.50,000 சம்பளத்தில் உள்ளூரிலேயே அரசு வேலை - 8-ம் வகுப்பு படித்தவர்கள் முந்துங்கள்!

Published : Feb 04, 2026, 06:16 PM IST

TNRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் (TNRD) அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம், கடைசி தேதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரங்கள் உள்ளே.

PREV
15
TNRD

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் (Panchayat Union Office) இந்த காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8-ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும், அரசு வேலையில் சேர இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

25
கல்வித் தகுதி என்ன?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. மிதிவண்டி (Cycle) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசின் ஊதிய நிலை-1 (Pay Level-1) அடிப்படையில் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும். இத்துடன் இதர அரசுப் படிகளும் கிடைக்கும்.

35
வயது வரம்பு (Age Limit)

விண்ணப்பதாரர்கள் 01.07.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

• பொதுப் பிரிவினர் (OC): 32 வயது வரை.

• BC/MBC/DNC: 34 வயது வரை.

• SC/ST/SCA: 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

45
விண்ணப்பிப்பது எப்படி? (Offline Mode Only)

இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

1. உங்கள் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (எ.கா: tiruppur.nic.in அல்லது erode.nic.in) சென்று விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்யவும்.

2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், முன்னுரிமைச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைக்கவும்.

3. இதனை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அந்தந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் (BDO) முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் (Registered Post) மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

55
முக்கிய தேதிகள்

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கும் கடைசி தேதி மாறுபடும்.

• ஈரோடு (சென்னிமலை & ஈரோடு ஊராட்சி ஒன்றியம்): விண்ணப்பிக்கக் கடைசி தேதி 10.02.2026.

• திருப்பூர் (தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்): விண்ணப்பிக்கக் கடைசி தேதி 09.02.2026.

• (உங்கள் மாவட்ட ஆட்சியர் இணையதளத்தை அடிக்கடி பார்த்து தெரிந்துகொள்ளவும்).

தேர்வு முறை

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு கிடையாது.

Read more Photos on
click me!

Recommended Stories