தலைநகர் சென்னையில் நாளைய தினம் நந்தனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த முகாம் காலை 8 மணியளவில் தொடங்கி பிற்பகல் 3 மணிவரை நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் சுமார் 20000 இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாமில் பங்கேற்ற விரும்பும் இளைஞர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLScpLaGvQqcvsk0NNOwB50EonRg9I8jaIiNTFwt-AuQWv297wQ/viewform என்ற இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.