தொகுப்பூதியம்
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தொகுப்பூதியமாக அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளருக்கு மாதம் ரூ. 7,700 முதல் 24,200 வரையிலும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாதம் ரூ. 4,100 முதல் 12,500 வரையிலும் ஊதியம் வழங்கப்படும். பணியில் சேர்ந்து 12 மாதங்கள் நிறைவு செய்த பிறகு, அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களின் நகல்களில் சுய கையொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.
தேர்வு முறை
பெறப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவை அடங்கிய அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலரால் அனுப்பப்படும். நேர்காணலின்போது விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.