Tirunelveli Tamilnadu Anganwadi Recruitment 2025
திருநெல்வேலி மாவட்டத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் 119 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த வேலைக்குத் தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 2025 ஏப்ரல் 26. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதலில் தொகுப்பூதியமாக ரூ.3,000 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பிறகு, சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 - ரூ.3000-9000) ஊதியம் வழங்கப்படும்.