இந்நிலையில் தமிழக அரசு இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது, அந்த அறிவிப்பில், “அரசு பல்கலைக்கழகங்களில் உறுப்பு கல்லூரிகளாக இருந்த கல்லூரிகள் நிர்வாகம் மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அப்படி மாற்றம் செய்யப்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நிலுவை இருந்து வந்தது. இந்த நிலுவையை உடனடியாக வழங்க உயர்கல்வி துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.