அதில், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஜூன் 2, 2025 (திங்கட்கிழமை) அன்று திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு எப்போது திறக்கப்படும் என்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.