UPSC தேர்வு முடிவுகள் 2025: தமிழ்நாட்டில் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற 50 பேர் தேர்ச்சி

Published : Apr 22, 2025, 10:40 PM IST

UPSC சிவில் சர்வீஸ் தேர்வு 2025 முடிவுகளில் தமிழ்நாட்டின் சிவச்சந்திரன் முதலிடம். 'நான் முதல்வன்' திட்டத்தின் பயிற்சி பெற்ற 50 பேர் தேர்ச்சி. முழு விவரங்கள் இங்கே.  

PREV
15
UPSC தேர்வு முடிவுகள்  2025: தமிழ்நாட்டில் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற 50 பேர் தேர்ச்சி

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன், அகில இந்திய அளவில் 23ஆம் இடத்தைப் பிடித்து மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரைத் தொடர்ந்து மோனிகா என்ற தேர்வர் 39ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். இவரும் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

25

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நேர்காணல் நடைபெற்ற நிலையில், இன்று (ஏப்ரல் 22) இறுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பொதுப் பிரிவில் 335 பேரும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவில் 109 பேரும், ஓபிசி பிரிவில் 318 பேரும், எஸ்சி பிரிவில் 160 பேரும், எஸ்டி பிரிவில் 87 பேரும் தேர்வாகியுள்ளனர்.
 

35

50 பேர் தேர்ச்சி
இந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால், 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற 134 பேர் நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருந்தனர். அவர்களில் 50 பேர் தற்போது தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த 50 பேரில், 14 பேர் 'நான் முதல்வன்' முழுநேர உறைவிடப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

45

மேலும், காமராஜ் மற்றும் சங்கரபாண்டியன் ஆகிய இரு தேர்வர்கள் தமிழ் வழியில் யுபிஎஸ்சி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதும் கூடுதல் பெருமை சேர்க்கிறது. இதன்மூலம், தாய்மொழியில் படித்தாலும் உயர்ந்த இலக்குகளை அடைய முடியும் என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர்.

55

'நான் முதல்வன்' திட்டம் அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தவும், போட்டித் தேர்வுகளுக்கு அவர்களை தயார்படுத்தவும் தமிழக அரசால் தொடங்கப்பட்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு உயர்தர பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் தேவையான வளங்கள் வழங்கப்படுகின்றன. இதன் விளைவாக, இந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர். சிவச்சந்திரன் மற்றும் மோனிகா ஆகியோரின் வெற்றிகள் மற்ற மாணவர்களுக்கும் பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 'நான் முதல்வன்' திட்டம் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சக்தி துபே: 7 ஆண்டுகள் கடின உழைப்பு! 5வது முயற்சியில் UPSC 2024 சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம்!

Read more Photos on
click me!

Recommended Stories