காலேஜ் ஸ்டூடன்ஸ் ஹேப்பி.. நாளை நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு! நெல்லை பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!

Published : Nov 23, 2025, 08:14 PM IST

MS University Exams கனமழை காரணமாக நாளை (24.11.2025) நடைபெறவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

PREV
14
MS University Exams கனமழையால் தேர்வுகள் ஒத்திவைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் நலன் கருதி, நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

24
தமிழக அரசின் அறிவுறுத்தல்

தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்கவும், மாவட்டத்தில் நிலவும் வானிலை சூழலைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து இணைவு பெற்ற கல்லூரிகள் (Affiliated Colleges) மற்றும் பல்கலைக்கழகத் துறைகளில் (University Departments) நாளை (24.11.2025) நடைபெற இருந்த 2025 நவம்பர் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

34
மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் (Controller of Examinations) தெரிவித்துள்ளார். மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

44
மாணவர்கள் நிம்மதி

தொடர் மழையால் போக்குவரத்து மற்றும் இதர சிரமங்களை எதிர்கொண்டு வந்த மாணவர்களுக்கு, இந்த அறிவிப்பு ஒரு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories