M.S.University மனோ கல்லூரிகளில் அட்மிஷன் ஆரம்பம்:நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாணவர்களுக்கு தரமான வாய்ப்பு

Published : May 07, 2025, 06:34 PM ISTUpdated : May 07, 2025, 07:59 PM IST

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மனோ கல்லூரிகளில்  2025-26 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைகள் ஆரம்பம். உடனே விண்ணப்பித்து உங்கள் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள்!

PREV
18
M.S.University மனோ கல்லூரிகளில் அட்மிஷன் ஆரம்பம்:நெல்லை, தூத்துக்குடி, தென்காசி  மாணவர்களுக்கு தரமான வாய்ப்பு
மனோ கல்லூரிகளில்  2025-26 அட்மிஷன்

தென் தமிழகத்தின் கல்வி மையமாகத் திகழும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் , வரவிருக்கும் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெல்லை மண்ணின் பெருமையை உலகறியச் செய்த இந்த பல்கலைக்கழகம், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் பல்வேறு வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்குகிறது.

28
மனோ கல்லூரி இடங்கள்

சங்கரன்கோவில், கோவிந்தபேரி, புளியங்குடி, நாங்குநேரி, திசையன்விளை, பணகுடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழக கல்லூரிகளில் இந்தச் சேர்க்கை நடைபெற உள்ளது. தரமான கல்வி மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் திகழும் இந்த கல்லூரிகள், மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன.

38
கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, சங்கரன்கோவில்:
    பி.காம்.
    பி.பி.ஏ.
    பி.எஸ்சி. (கணிதம்)
    பி.சி.ஏ.
    பி.ஏ. (ஆங்கிலம்)

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, பணகுடி:
    பி.காம்.
    பி.எஸ்சி. (கணிதம்)
    பி.ஏ. (ஆங்கிலம், தமிழ்)
    எம்.காம்.
 


 

48
கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, கோவிந்தபேரி:
    பி.காம்.
    பி.பி.ஏ.
    பி.எஸ்சி. (கணிதம், இயற்பியல், வேதியியல்)
    பி.சி.ஏ.
    பி.ஏ. (ஆங்கிலம், தமிழ்)
    எம்.காம்.
    எம்.ஏ. (ஆங்கிலம்)
    எம்.எஸ்சி. (கணிதம்)
 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, திசையன்விளை:
    பி.காம்.
    பி.ஏ. (ஆங்கிலம், தமிழ்)
    பி.எஸ்சி. (கணிதம்)
    எம்.ஏ. (ஆங்கிலம்)
    எம்.காம்.
 

58
கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, நாகம்பட்டி:
    பி.காம்.
    பி.பி.ஏ.
    பி.எஸ்சி. (கணிதம்)
    பி.ஏ. (தமிழ்)


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, புளியங்குடி:
    பி.காம்.
    பி.பி.ஏ.
    பி.எஸ்சி. (கணிதம், கணினி அறிவியல்)
    பி.ஏ. (ஆங்கிலம்)
 

68
கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகள்

மேலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, சான்றிதழ் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்குகிறது. குறிப்பாக, பி.எஸ்சி., எம்.பி.ஏ., பி.காம்., பி.ஏ. போன்ற படிப்புகள் பிரபலமானவை.

78

பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமானhttp://www.msuniv.ac.in வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தையும், சேர்க்கைக்கான வழிமுறைகளையும் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக, ஒவ்வொரு கல்லூரி வாரியாக வழங்கப்படும் படிப்புகள் மற்றும் அதற்கான தகுதிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 

88
phd

முக்கியமாக, விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 100/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த கல்லூரிகளில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி தேதி மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் விரைவில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும்.

எனவே, தரமான கல்வியை இலக்காகக் கொண்டுள்ள மாணவர்கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். உங்கள் எதிர்காலக் கனவுகளை நனவாக்க, இப்பொழுதே விண்ணப்பியுங்கள்!

மேலும் விவரங்களுக்கு: https://www.msuniv.ac.in/uploads/marquee/pdfs/MSU_Colleges_Admission.pdf

Read more Photos on
click me!

Recommended Stories