
சென்னை என்றாலே நினைவுக்கு வருவது மயிலாப்பூர், மயிலாப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில். வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருக்கோயிலில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அந்தக் கனவை நனவாக்கும் வகையில், தற்போது 19 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் இப்பணிக்கு எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது என்பது கூடுதல் சிறப்பு.
இந்த வேலைவாய்ப்பில் பல்வேறு நிலைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். படிப்புக்கு ஏற்ற வேலை மற்றும் சம்பளம் காத்திருக்கிறது.
10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு: இளநிலை உதவியாளர் (Junior Assistant) மற்றும் சீட்டு விற்பனையாளர் (Ticket Seller) பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். (சீட்டு விற்பனையாளர் பணிக்குத் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்).
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு: பாரா, காவலர், உதவி பரிசாரகர் போன்ற பணிகளுக்குத் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தாலே போதுமானது.
பட்டதாரிகளுக்கு: உதவிப் பொறியாளர் (Assistant Engineer) மற்றும் தமிழ் புலவர் பணியிடங்களுக்குச் சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
பணிக்கு ஏற்றவாறு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படும்.
* இளநிலை உதவியாளர் / சீட்டு விற்பனையாளர்: ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை.
* உதவிப் பொறியாளர்: ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை.
* காவலர் / பாரா: ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை.
பணிக்கு ஏற்றவாறு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படும்.
* இளநிலை உதவியாளர் / சீட்டு விற்பனையாளர்: ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை.
* உதவிப் பொறியாளர்: ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை.
* காவலர் / பாரா: ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை.
வழக்கமாக அரசு வேலைகளுக்குக் கடுமையான எழுத்துத் தேர்வுகள் இருக்கும். ஆனால், இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்பது முக்கிய விதிமுறை. வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது ஆன்லைன் விண்ணப்பம் அல்ல, தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
1. [https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/](https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/) என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரியச் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.
3. சுய விலாசம் இட்ட அஞ்சல் உறையில் ரூ.75/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை (Stamp) ஒட்டி விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
4. விண்ணப்ப உறையின் மீது "பணியிடத்திற்கான விண்ணப்பம்" என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,
மயிலாப்பூர், சென்னை – 600 004.
கடைசி தேதி: 28.12.2025
சென்னையில் வசிப்பவர்களுக்கும், கோவில் சூழலில் பணிபுரிய விரும்புபவர்களுக்கும் இதுவொரு பொன்னான வாய்ப்பு. கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்!