டர்ன் குரூப் ஆய்வின்படி, 52% இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில் பணியாற்ற விரும்புகின்றனர். பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்காக ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்திய இளைஞர்களிடையே வெற்றி என்பது உலகளாவிய வாய்ப்புகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. 'டர்ன் குரூப்' (Turn Group) என்ற ஏஐ (AI) திறனாய்வு தளம் நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்திய இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (52%) வெளிநாடுகளில் பணியாற்றத் திட்டமிட்டு வருவது தெரியவந்துள்ளது.
25
ஏன் வெளிநாடு செல்ல விரும்புகிறார்கள்?
இந்த ஆய்வின்படி, இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்கு முக்கியக் காரணங்களாகப் பின்வருவனவற்றைத் தெரிவிக்கின்றனர்:
• பொருளாதார முன்னேற்றம் (46%): அதிக வருமானம் மற்றும் நிதி ரீதியான வளர்ச்சி முதன்மைக் காரணியாக உள்ளது.
• தொழில் வளர்ச்சி (34%): சிறந்த பணி அனுபவம் மற்றும் கரியர் வளர்ச்சியை இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
• இதர காரணங்கள்: தனிப்பட்ட விருப்பங்கள் (9%) மற்றும் சர்வதேச அனுபவம் பெறுதல் (4%).
35
மாறிவரும் விருப்பமான நாடுகள்
முன்பெல்லாம் அமெரிக்கா மற்றும் லண்டன் மட்டுமே இலக்காக இருந்த நிலையில், இப்போது இளைஞர்களின் பார்வை மாறியுள்ளது:
1. ஜெர்மனி (43%): பெரும்பாலான இந்திய இளைஞர்களின் முதல் விருப்பமாக ஜெர்மனி உருவெடுத்துள்ளது.
2. இங்கிலாந்து (17%)
3. ஜப்பான் (9%)
4. அமெரிக்கா (4%)
இந்தியத் திறமையாளர்களுக்கு சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு இருப்பதாக 57% பேர் நம்புகின்றனர்.