அமெரிக்கா மற்றும் கனடாவிற்குப் பதிலாக, இந்திய மாணவர்கள் இப்போது ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற நாடுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பாக, 2025 முதல் 2030 வரையிலான காலத்தில் ஜெர்மனியில் இந்திய மாணவர்களின் சேர்க்கை 82% அதிகரிக்கும் என்றும், பிரான்சில் இது 116% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறைவான கல்விக் கட்டணம் மற்றும் எளிதான விசா நடைமுறைகள் மாணவர்களை இந்த நாடுகளை நோக்கி ஈர்க்கின்றன.
வேலைவாய்ப்பு மற்றும் விசா சிக்கல்கள்
அமெரிக்காவில் H-1B விசா கிடைப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் நிலவும் மந்தநிலை ஆகியவை மாணவர்களை யோசிக்க வைக்கின்றன. "படிப்பு முடித்தவுடன் வேலை கிடைக்குமா?" என்ற அச்சம் மாணவர்களிடத்தில் உள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு போன்றவை, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் தரத்தை பாதிக்கும் என்ற கவலையும் எழுந்துள்ளது.