இந்த புதிய முயற்சி, JEE தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களுக்கும், வேலை பார்க்கும் நிபுணர்களுக்கும், வாழ்க்கைப் பாதையை மாற்ற விரும்புபவர்களுக்கும் ஐஐடி தரத்திலான கல்வியை பெறுவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. தற்போது 38,000க்கும் மேற்பட்டோர் இந்த ஆன்லைன் படிப்புகளில் இணைந்துள்ளனர். வழக்கமான பொறியியல் மாணவர் என்றில்லாமல், பல்வேறு பின்னணியில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இந்தத் திட்டத்தின் வரவேற்பை உணர்த்துகிறது. இதில் 25% பெண்கள் மற்றும் 20% பேர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.