நாகை-இலங்கை பயணத்திற்கு ரூ.4,500 ரூபாயும், இலங்கை-நாகை பயணத்திற்கு ரூ.3,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இலங்கை சென்று திரும்பி வர ஒரு நபருக்கு 8ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் கப்பல் பயணத்தை பெரிதும் விரும்பினார்கள்.
இந்த நிலையில் சுபம் கப்பல் நிறுவனம் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை இடையே சிவகங்கை பயணிகள் கப்பலை கடந்த ஒராண்டு காலமாக இயக்கி வருகிறது. நவம்பர் மாதம் முழுவதும் கப்பல் சேவை ரத்து செய்யப்பட இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.