ஃபெடரல் வங்கியில் Associate Officers (Sales) பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிராவில் வேலை. மாதம் ரூ. 38,000 வரை சம்பளம். ஜூன் 22, 2025 கடைசி தேதி.
ஃபெடரல் வங்கி, தனது Associate Officers (Sales) பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வங்கி வேலை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் கிடைக்கும். தகுதியான பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்ப செயல்முறை ஜூன் 10, 2025 அன்று தொடங்கி, ஜூன் 22, 2025 அன்று முடிவடைகிறது.
26
காலிப்பணியிடங்கள், சம்பளம் மற்றும் கல்வித் தகுதி!
Associate Officers (Sales) பதவிக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 4.59 லட்சம் முதல் ரூ. 6.19 லட்சம் வரை (மாதத்திற்கு சுமார் ரூ. 38,000 வரை) சம்பளமாக வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி கொண்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
36
வயது வரம்பு மற்றும் சலுகைகள்!
விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், PwBD (பொது/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள், PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள் என வயது தளர்வு அளிக்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 350 ஆகும்.
விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்டத் தேர்வு முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதலில், கணினி அடிப்படையிலான ஆன்லைன் திறனறி தேர்வு (Computer Based Online Aptitude Test) நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் (Interview) நடத்தப்படும்.
56
முக்கிய தேதிகள்!
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: ஜூன் 10, 2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 22, 2025
தேர்வு தேதி: ஜூலை 06, 2025
66
எப்படி விண்ணப்பிப்பது?
ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஃபெடரல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.federalbank.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் கவனமாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. வங்கித் துறையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.