இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, மாணவிகள் சில முக்கிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
• மாணவி சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
• மாணவியின் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
• மாணவி, குடும்பத்தின் ஒரே மகளாக இருக்க வேண்டும்.
• மாணவி, சிபிஎஸ்இ-யின் அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தொடர்ந்து படித்து வர வேண்டும்.
• மாணவியின் மாதாந்திர பள்ளி கட்டணம் (Monthly School Fee) ₹2,500-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
• மாணவி இந்தியக் குடிமகளாக இருக்க வேண்டும்.
மேலும், 2024ஆம் ஆண்டில் இந்த உதவித்தொகையைப் பெற்றவர்கள், 2025ஆம் ஆண்டிற்கும் அதைப் புதுப்பித்துக் கொள்ளலாம். புதுப்பிக்க, மாணவி முந்தைய ஆண்டிலும் 70% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.