இனி 75% வருகைப்பதிவு இருந்தா தான் தேர்வு எழுத முடியும்! சிபிஎஸ்இ புதிய விதிகள் அறிவிப்பு!

Published : Aug 06, 2025, 08:52 PM ISTUpdated : Aug 06, 2025, 09:00 PM IST

2026ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க 75% வருகை கட்டாயம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. உடல்நலக் குறைபாடு, குடும்பத்தில் மரணம் போன்ற காரணங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும்.

PREV
16
சிபிஎஸ்இ வருகைப்பதிவு விதிகள்

2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க, 2025-26 கல்வி ஆண்டில் குறைந்தபட்சம் 75% வருகைப் பதிவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதற்கான புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை உள்ளடக்கிய சுற்றறிக்கையை ஆகஸ்ட் 4 அன்று சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

26
போலி மாணவர்களை தடுப்பதே நோக்கம்

மாணவர்களின் வருகைப்பதிவு குறைவாக உள்ள புகார்களை அடுத்து, கல்வி ஒழுக்கத்தை உறுதிசெய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வுகள் விதி 13 மற்றும் 14-ன்படி, 75% வருகைப்பதிவு இல்லாத மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வாரியம் எச்சரித்துள்ளது. கடுமையான உடல்நலக் குறைபாடுகள், குடும்பத்தில் மரணம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேசிய/சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது போன்ற சில குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும். இருப்பினும், அதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

36
புதிய வழிகாட்டுதல்கள்

புதிய கல்வி ஆண்டு தொடங்கும்போதே, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வருகைப்பதிவு விதிமுறைகள் மற்றும் அதை பின்பற்றாததால் ஏற்படும் விளைவுகள் குறித்து பள்ளிகள் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

ஒரு மாணவரின் வருகைப்பதிவு குறைந்தால், பெற்றோர்களுக்குப் பதிவு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாக எழுத்துபூர்வமாக எச்சரிக்கை அனுப்ப வேண்டும்.

46
ஆவணங்கள் முக்கியம்

உடல்நலக் குறைவு காரணமாக விடுப்பு எடுக்கும் மாணவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பிற அவசர காரணங்களுக்கு, இறப்புச் சான்றிதழ் போன்ற முறையான ஆவணங்கள் கட்டாயம். விடுப்பு எடுத்த உடனேயே இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஜனவரி 1, 2026 வரை உள்ள வருகைப்பதிவு கணக்கிடப்பட்டு, வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவர்களின் விவரங்களை ஜனவரி 7-ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ-க்கு பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

56
தணிக்கை மற்றும் நடவடிக்கை

வருகைப்பதிவு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய, சிபிஎஸ்இ தனது இணைக்கப்பட்ட பள்ளிகளில் திடீர் ஆய்வுகளை நடத்த உள்ளது. இந்த ஆய்வின் போது, வருகைப்பதிவு பதிவேடுகளில் குறைபாடுகள் அல்லது முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மாணவர்களின் தகுதியை ரத்து செய்வது, மற்றும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

66
வருகைப்பதிவு குறைவாக இருந்தால்...

வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவர்களின் விவரங்கள் ஒருமுறை சிபிஎஸ்இ-க்கு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அதில் எந்த மாற்றமும் செய்ய அனுமதிக்கப்படாது என்றும், அவ்வாறு செய்ய முயன்றால் அது மோசடியாகக் கருதப்படும் என்றும் வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள், மாணவர்களிடையே ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories