பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஒப்பந்த அடிப்படையில் துணைப் பொறியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணியில் சேந்தால் மாத சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை கிடைக்கும். உடனே அப்ளை பண்ணுங்க மக்களே.!
வேலை தேடும் பொறியியல் பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் துணைப் பொறியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. தகுதியான பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
25
துணைப் பொறியாளர் பதவிக்கு 2 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் துணைப் பொறியாளர் பதவிக்கு 2 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு செய்யப்படும் candidates-க்கு ஆரம்பத்தில் 2 ஆண்டுகள் பணி வழங்கப்படும். நிறுவனத்தின் தேவையும், பணித்திறனும் அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்த காலம் பின்னர் நீட்டிக்கப்படலாம். தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
35
கவர்ச்சிகரமான சம்பளம்: மாதம் ரூ.1.40 லட்சம் வரை பெறும் வாய்ப்பு.
தேர்வு செய்யப்படும் துணைப் பொறியாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம், தகுதி மற்றும் பணிப்பொறுப்புகளுக்கு ஏற்ப சம்பள விவரங்களில் மாற்றம் இருக்கலாம். இந்த வேலைவாய்ப்பு பொறியியல் துறையில் சிறந்த அனுபவத்தைப் பெற விரும்பும் தகுதியானவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.
யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்கள்.
BEL துணைப் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B.E. அல்லது B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 28 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு 31 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.
55
விண்ணப்பிப்பது எப்படி? கடைசி தேதி செப்டம்பர் 4.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் BEL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது கல்விச் சான்றிதழ்கள், வயது மற்றும் பிரிவுச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பக் கட்டணம் இருந்தால், அதனையும் உரிய முறையில் செலுத்தி விண்ணப்பத்தை முழுமையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.