என்னது பி.எட் படிக்காமலே ஒருவர் டீச்சர் ஆகலாமா? ஆகலாம்.. எப்படினு உங்களுக்கு தெரியுமா?

First Published Sep 14, 2024, 8:15 PM IST

Teachers : மாணவர்கள் நன்கு படித்து, தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பி.எட் முடித்தவர்கள் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

B.ed Degree

இந்தியாவை பொறுத்தவரை பி.எட் என்பது தான் நீங்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற தேவையான அடிப்படை தகுதி. ஆனால் சில நேரங்களில் நீங்கள் அந்த பி.எட் படிப்பை முடிக்காமல் கூட, அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற முடியும். ஆம் அது உண்மை தான், சரி அது எப்படி சாத்தியம் என்பதை இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

Tamilnad Mercantile Bank: தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் வேலை! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ITEP Programme

ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் 

ITEP என்பது நான்கு ஆண்டு இளங்கலை பாட திட்டமாகும், இது ஆசிரியர் கல்வியை பல்துறை இளங்கலைக் கல்வியுடன் இணைக்கும் ஒரு பாலம் என்றே கூறலாம். இந்தத் திட்டம் தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP) உட்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் மூலம், ஒருவரால்  இரண்டு படிப்புகளை ஒரே நேரத்தில் படித்து முடிக்க முடியும். அதாவது அவரால் இளங்கலை படிப்பு படிக்கும் போதே, கற்பித்தல் பயிற்சியும் பெற முடியும். அதாவது நீங்கள் உங்கள் பள்ளி படிப்பை முடித்தபிறகு வருடத்தை வீணடிக்காமல், நீங்கள் பயிலும் பி.எஸ்சி, பி.காம், பி.ஏ போன்ற வழக்கமான பட்டப்படிப்புகளுடன் இணைந்து பி.எட் படிப்பை முடிக்க முடியும், இதன் மூலம் நீங்கள் 1 வருடத்தை சேமிக்கவும் முடியும்.

அதே சமயம் இந்த ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தில் இணைய, நீங்கள் அரசால் நடத்தப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வினை (NCET) எழுத வேண்டும். அதில் நீங்கள் வெற்றி பெறும் பட்சத்தில், பி.எட் படிக்காமலேயே நீங்கள் படித்த டிகிரியை வைத்து உங்களால் அரசு பள்ளிகளில் பணியாற்றி முடியும். ஆனால் முதன்மை நிலை எனப்படும் பிரைமரி பள்ளியில் மட்டுமே உங்களால் ஆசிரியராக பணியாற்ற முடியும். உயர் கல்வியில் ஆசிரியராக பணியாற்ற கட்டாயம் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

Latest Videos


PGT Programme

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பி.எட் படிக்காமலேயே அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற முடியும். ஆனால் அது அனைவருக்கும் கிடைத்துவிடும் வாய்ப்பு அல்ல. பள்ளி படிப்பில் சிறந்து விளங்கி, இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் அனைத்து பாடங்களிலும் 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த நபர்கள் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அதற்கு முன்னதாக நீங்கள் PGT தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அந்த பரிட்சையில் தேர்வு பெற்று நீங்கள் அரசு பள்ளியில் ஆசிரியராக இணைந்தாலும், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நீங்கள் கட்டாயம் பி.எட் முடித்தாக வேண்டும்.

Private school

டி.எட் 

நீங்கள் பி.எட் முடிக்காமலேயே இரண்டு ஆண்டு டி.எட் முடித்து கூட உங்களால் அரசு பள்ளிகளில், தேர்வுகள் எழுதி ஆசிரியராக இணைய முடியும். ஆனால் அப்படி இணைந்தாலும் உங்களால் பிரைமரி பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே ஆசிரியராக மாற முடியும். உயர்கல்வி வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியராக மாற வேண்டும் என்றால் கட்டாயம் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

தனியார் பள்ளிகள் 

பொதுவாக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற மட்டுமே நீங்கள் கட்டாயம் பி.எட் முடித்திருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு கல்வி கற்பிப்பது தான் குறிக்கோள் என்றால், நீங்கள் பி.எட் முடிக்காமலேயே தனியார் பள்ளிகளில் கூட இணைந்து ஆசிரியராக பணியாற்ற முடியும்.

TNPSC Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! என்னென்னு தெரியுமா?

click me!