இலவச வைஃபை நெட்வொர்க்குகள் மூலம் பரிவர்த்தனைகள் செய்வதையோ அல்லது தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதையோ தவிர்க்குமாறு அரசாங்கம் மக்களை வலியுறுத்தியுள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, CERT-In சில முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகளையும் பகிர்ந்துகொண்டுள்ளது. அறிமுகமில்லாத வழிகளில் வரும் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம், அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் நீண்ட மற்றும் வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும், முக்கியமான கோப்புகளை அடிக்கடி பேக்அப் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.