உங்கள் முதலீட்டில் கை வைக்காதீங்க… செபி செய்த முக்கிய மாற்றம்.. லாபம் கிடைக்குமா?

Published : Dec 19, 2025, 11:05 AM IST

பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஸ்டாக் புரோக்கர்களுக்கான விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இது நிதி அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

PREV
14
செபி மியூச்சுவல் ஃபண்ட் விதிகள்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஸ்டாக் புரோக்கர்களைச் சார்ந்த விதிகளில் பெரிய மாற்றங்களை அனுமதித்துள்ளது. இந்த மாற்றங்கள் முதலீட்டாளர்களின் செலவுகளைக் குறைத்து, நிதி அமைப்பை மேலும் வெளிப்படையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீப ஆண்டுகளில் செபி எடுத்த மிகப் பெரிய சீர்திருத்தமாக இது பார்க்கப்படுகிறது. சாதாரண முதலீட்டாளர்களின் சேமிப்பு மற்றும் வருமானத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றங்கள், இவற்றை புரிந்து கொள்வது அவசியம்.

24
சில்லறை முதலீட்டாளர்

இந்த மாற்றங்களின் முக்கிய அம்சமாக, மியூச்சுவல் ஃபண்ட் விதிகள் முழுமையாக மறுபடியும் எழுதப்படுகின்றன. “செபி (Mutual Fund) Regulations, 2026” என்ற புதிய விதிமுறை புத்தகம் கொண்டு வரப்படுகிறது. இதுவரை பல சர்குலர்களாக இருந்த விதிகள் அனைத்தும் ஒரே சட்ட வடிவில் தொகுக்கப்படுகின்றன. முதலீட்டாளர் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை விதிகள் மாற்றமின்றி தொடரும்; ஆனால், எளிமையாக மொழியாக்கப்பட்டு, தகவல்கள் தெளிவாக வழங்கப்படும் என செபி தெரிவித்துள்ளது. இதனால் புதிய முதலீட்டாளர்களுக்கும் விதிகளை புரிந்து கொள்வது சுலபமாகும்.

34
மியூச்சுவல் ஃபண்ட் செலவு

முதலீட்டாளர்களுக்கு நேரடியாக நன்மை தரும் முக்கிய மாற்றம் செலவுகள் தொடர்பானது. இதுவரை “Expense Ratio” என அழைக்கப்பட்டதை, இனி “Base Expense Ratio” என செபி மாற்றியுள்ளது. ஜிஎஸ்டி, ஸ்டாம்ப் டியூட்டி, பரிவர்த்தனை வரி போன்ற அரசு கட்டணங்கள் தனியாகக் காட்டப்படும். இதனால் முதலீட்டில் எவ்வளவு செலவு, எதற்காக செலவாகும் என்பதை முதலீட்டாளர்கள் தெளிவாக அறிய முடியும். மேலும், பல்வேறு வகை ஃபண்டுகளுக்கான மேலாண்மை கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், நீண்டகால வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

44
ப்ரோக்கரேஜ் கட்டணம்

இதற்குப் பிறகு, பங்குச் சந்தையில் ப்ரோக்கரேஜ் கட்டணங்களுக்கு உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு முதலீட்டாளர்களின் வர்த்தகச் செலவு குறையும். IPO முதலீட்டாளர்களுக்காக சுருக்கமான பிராஸ்பெக்டஸ் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும், டிமாட் கணக்கில் பங்குகள் மாற்றம் வேகமாக நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, முன்பு சில மாதங்கள் எடுத்த செயல்முறை சில வாரங்களிலேயே முடியும். மொத்தத்தில், செபி-யின் இந்த புதிய விதிகள் முதலீட்டாளர்களுக்கு நேரடி நிதி நன்மை தரும் மாற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories