PMAY-G: 40 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல்! மத்திய அரசின் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?

Published : Feb 08, 2025, 06:19 PM ISTUpdated : Feb 08, 2025, 06:26 PM IST

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் 84.37 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் இதுவரை 39.82 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2024-25 முதல் 2028-29 வரை கூடுதலாக இரண்டு கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

PREV
15
PMAY-G: 40 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல்! மத்திய அரசின் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) கீழ் இதுவரை 39.82 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளது.

2024-25 ஆம் ஆண்டிற்கான 84.37 லட்சம் வீடுகள் என்ற இலக்கில், இதுவரை 39.82 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஒப்புதல் அலிக்கப்பட்டுள்ளது என்று கிராமப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சந்திர சேகர் பெம்மாசானி அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். மேலும்  அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய 18 மாநிலங்களில் 2024-25 ஆம் ஆண்டில் 84,37,139 வீடுகளைக் கட்ட அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

25
எவ்வளவு வீடுகள் ஒதுக்கீடு?

இந்த 84,37,139 வீடுகளில், 46,56,765 வீடுகள் டிசம்பர் 2024 மற்றும் ஜனவரி 2025 மாதங்களில் 9 மாநிலங்களுக்கு - அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா - ஒதுக்கப்பட்டன.

மொத்த இலக்கில், பிப்ரவரி 2, 2025 நிலவரப்படி 39,82,764 வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

2024-25 முதல் 2028-29 வரை கூடுதலாக இரண்டு கோடி வீடுகள் கட்டுவதற்காக PMAY-G திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

35
ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

PMAY திட்டத்தில் குடிசைவாசிகள், எஸ்.சி, எஸ்.டி மக்கள், சிறுபான்மையினர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு வீடு கிடைக்கும். 

PMAY-G வலைத்தளத்திற்குச் செல்லவும்
உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட உங்கள் தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்
உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் படிவத்தைப் பதிவேற்றவும்
உங்கள் பெயர் மற்றும் PMAY ஐடியைக் கண்டறிய தேடு என்பதைக் கிளிக் செய்யவும்
பதிவு செய்யத் தேர்ந்தெடுக்கவும்
உங்கள் வங்கிக் கணக்கு எண் உட்பட மீதமுள்ள விவரங்களை நிரப்பவும்
உங்களுக்கு கடன் தேவைப்பட்டால், ஆம் என்பதைத் தேர்ந்தெடுத்து உங்களுக்குத் தேவையான தொகையை உள்ளிடவும்
உங்கள் MGNREGA வேலை அட்டை எண் மற்றும் ஸ்வச் பாரத் மிஷன் (SBM) எண்ணைப் பதிவேற்றவும்

45
ஆஃப்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் செல்லுங்கள் அல்லது உங்கள் வார்டு உறுப்பினரைத் தொடர்பு கொள்ளுங்கள்
PMAY விண்ணப்பப் படிவத்தைக் கேளுங்கள்
விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவும்
உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, ஒரு அதிகாரி உங்கள் தகவலைச் சரிபார்ப்பார். நீங்கள் தகுதி பெற்றால், உங்களுக்கு ஒப்புதல் மற்றும் நிதி உதவி கிடைக்கும்.

55
தேவையான ஆவணங்கள் என்னென்ன?

ஆதார் எண்

ஆதார் அட்டையின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்

வேலை அட்டை (MGNREGA இல் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது)

வங்கிக் கணக்கு விவரங்கள் - அசல் மற்றும் நகல்.

ஸ்வச் பாரத் மிஷன் (SBM) எண்.

பயனாளிகள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சொந்தமாக வீடு இல்லை என்பதைக் குறிக்கும் பிரமாணப் பத்திரம்.

click me!

Recommended Stories