இந்த பிசினஸை தொடங்குவது மிகவும் சுலபம். முதலில், 1 அல்லது 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலி பாட்டில்களை சேகரிக்க வேண்டும். பழைய பேப்பர் கடைகள் அல்லது ஸ்கிராப் கடைகளில் இதை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். அதன் பிறகு, பாட்டில்களை வெட்டி அல்லது துளையிட்டு, ஒரு செடி தொட்டியின் வடிவத்திற்கு மாற்ற வேண்டும். இதில்தான் உங்கள் கலை திறமை வேலை செய்கிறது. கார்ட்டூன், ஜியாமெட்ரிக் டிசைன் அல்லது இயற்கை வடிவங்கள் போன்றவற்றை உருவாக்கலாம்.
அடுத்து வரும் முக்கியமான கட்டம் பெயின்ட்டிங். பிரகாசமான வண்ணங்கள், அழகான டிசைன்கள் தான் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். அக்ரிலிக் அல்லது ஆயில் பெயின்ட் பயன்படுத்தி பாட்டில்களை அலங்கரிக்கலாம். பின்னர், மணி பிளான்ட், கற்றாழை போன்ற சிறிய செடிகளை நட்டு விற்பனைக்கு தயாராகலாம். செடியுடன் கூடிய தயாரிப்புகளுக்கு சந்தையில் அதிக மதிப்பு கிடைக்கும். தயாரிப்பு செலவு மிகக் குறைவு என்றாலும், ஒரு செட்டை ரூ.150 முதல் ரூ.300 வரை விற்க முடியும்.
விற்பனைக்கு பல வழிகள் உள்ளன. அருகிலுள்ள நர்சரிகளுக்கு சப்ளை செய்யலாம் அல்லது Instagram, WhatsApp, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் தயாரிப்புகளைப் பகிரலாம். மேலும், ஆன்லைன் மார்க்கெட்ப்ளேஸ்கள் மற்றும் உள்ளூர் சந்தைகளிலும் விற்பனை செய்யலாம். “Go Green” என்ற எண்ணம் அதிகரித்து வரும் நிலையில், மறுசுழற்சி செய்யப்பட்ட இந்த கார்டன் செட்களுக்கு நல்ல தேவை உள்ளது. குறைந்த முதலீட்டில் தொடங்கி, படைப்பாற்றலுடன் வளர்த்தால் இது ஒரு சிறந்த ஹோம் பிசினஸாக மாறும்.