இந்த விலை உயர்வு தமிழகத்தின் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களை நேரடியாகப் பாதித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், சிலிண்டர் விலை அதிகரிப்பு "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல" இருப்பதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மறுபுறம், வணிக சிலிண்டர் விலை உயர்வால் ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாகச் சிறு உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் நடத்துவோர், இந்த கூடுதல் செலவை எவ்வாறு சமாளிப்பது என்று திகைத்து நிற்கின்றனர்.
பொதுமக்கள் குழப்பம்
போர் பதற்றம் இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு தெளிவு படுத்தியிருந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் திடீரென சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பது சாமானிய மக்களிடையே குழப்பத்தை உருவாக்கி உள்ளது.