பென்ஷன் பணம் தொடர்ந்து கிடைக்க நவ. 30 க்குள் இதை செய்யுங்க!

Published : Nov 24, 2024, 09:42 AM IST

80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர், தொடர்ந்து பென்ஷன் கிடைக்க நவம்பர் 30ஆம் தேதிக்குள் தங்கள் ஜீவன் பிரமான் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

PREV
17
பென்ஷன் பணம் தொடர்ந்து கிடைக்க நவ. 30 க்குள் இதை செய்யுங்க!
Life Certificate for Pension

மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் பென்ஷன் பணத்தைத் தொடர்ந்து பெறுவதற்கு ஜீவன் பிரமான் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இந்தச் சான்றிதழைத் தாக்கல் செய்யலாம்.

27
Annual Life Certificate

ஜீவன் பிரமான் சான்றிதழ் வருமான வரி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இது ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் டிஜிட்டல் சான்றிதழ் ஆகும். இந்த ஆண்டு ஜீவன் பிரமான் சான்றிதழைச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

37
Jeevan Pramaan App

80 வயதை எட்டிய ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்கள் நவம்பர் 1ஆம் தேதிக்குப் பதிலாக அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்தே ஜீவன் பிரமான் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அவகாசம் முடியும் நாள் நவம்பர் 30. தேவைப்பட்டால் இந்த அவகாசம் நீட்டிக்கப்படலாம்.

47
Jeevan Pramaan Face App

ஜீவன் பிரமான் சான்றிதழை ஆன்லைனிலேயே எளிமையாக சமர்ப்பிக்கலாம். இந்தச் சான்றிதழைப் பெற ஆதார் எண் அவசியம். 'AadhaarFaceRD', 'Jevan Pramaan Face App' செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

57
Jeevan Pramaan Life Certificate

இந்தச் மொபைல் அப்ளிகேஷன் மூலம் முகத்தை ஸ்கேன் செய்து, ஓய்வூதியதாரர் தொடர்பான விவரங்களையும் நிரப்பவும். செல்ஃபி கேமராவில் போட்டு எடுத்து அப்லோட் செய்யவும். ஜீவன் பிரமான் சான்றிதழை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் SMS மூலம் கிடைக்கும். அதை டவுன்லோட் செய்து ஜீவன் பிரமான் இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.

67
Pensioners

ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஜீவன் பிரமான் சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படலாம். ஆனால், அடுத்த மாதத்தில் சான்றிதழைச் சமர்ப்பித்துவிட்டால், பென்ஷன் மீண்டும் கிடைக்கத் தொடங்கும். நிலுவைத் தொகையும் சேர்த்தே வழங்கப்படும். 3 ஆண்டுகளுக்குள் சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டும்தான் பென்ஷன் தொடர்ந்து கிடைக்கும்.

77
Jeevan Pramaan Rules

3 வருடம் மற்றும் அதற்கு மேல் ஜீவன் பிரமான் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், CPAO மூலம் உரிய செயல்முறையைப் பின்பற்றி மீண்டும் பென்ஷன் பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தகுதிவாய்ந்த அதிகாரியின் அனுமதியைப் பெற்ற பிறகுதான் ஓய்வூதியம் மீண்டும் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories