5 வருஷத்துக்கு மாதம் ரூ.9,250 வருமானம்! போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி?

Published : Nov 19, 2024, 10:23 AM IST

போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) வழக்கமான வருமானத்தை ஈட்டுவதற்கான சிறந்த வழி. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளது. ஓய்வுக்குப் பிறகு நிதி ஆதாரத்தைப் பெற இந்தத் திட்டத்தில் ஒரே ஒரு முறை முதலீடு செய்யலாம்.

PREV
16
5 வருஷத்துக்கு மாதம் ரூ.9,250 வருமானம்! போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி?
Post Office Schemes

போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) வழக்கமான வருமானத்தை ஈட்டுவதற்கான சிறந்த வழி. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளது. ஓய்வுக்குப் பிறகு நிதி ஆதாரத்தைப் பெற இந்தத் திட்டத்தில் ஒரே ஒரு முறை முதலீடு செய்யலாம்.

26
Post office Monthly Income Scheme

குறிப்பிட்ட தொகையை இத்திட்டத்தில் டெபாசிட் செய்தால் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வரை சம்பாதிக்கலாம். 5 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து இதே வருமானம் கிடைக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.

36
Monthly Income Scheme Interest Rate

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில், தனிநபராகவும் கூட்டாகவும் கணக்கு தொடங்கலாம். தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9,00,000 டெபாசிட் செய்யலாம். கூட்டுக் கணக்கில் ரூ.15,00,000 வரை டெபாசிட் செய்யலாம்.

46
Rs. 9250 Monthly Income

இத்திட்டத்தில் வட்டி விகிதம் 7.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்கள் மாத வருமானம் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையைப் பொறுத்தது. உதாரணமாக, அதிகபட்ச தொகையான ரூ.9,00,000 டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.5,550 வரை சம்பாதிக்கலாம். இன்னொரு குடும்ப உறுப்பினருடன் சேர்ந்து கூட்டுக் கணக்கு தொடங்கி ரூ.15,00,000 டெபாசிட் செய்தால், ரூ.9,250 மாத வருமானம் ஈட்டலாம்.

56
Post Office Savings

​​இந்தத் திட்டத்தில் முதிர்வுக் காலத்தில் கணக்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இல்லை. ஆனால், முதிர்ச்சி அடைந்தவுடன், டெபாசிட் செய்த பணத்தை திரும்பப் பெற்றதும், மீண்டும் புதிய கணக்கு தொடங்கி, இன்னும் 5 வருடத்திற்கு முதலீடு செய்யலாம். இதன் மூலம் தொடர்ந்து மாத வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

66
Post Office MIS benefits

இந்திய குடிமக்கள் அனைவரும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்குட்பட்ட குழந்தையாக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் கணக்கு ஆரம்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு ஏற்கெனவே தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அல்லது புதிதாக சேமிப்புக் கணக்கு தொடங்கியதும், இத்திட்டத்தில் சேரலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories