ரயில்வே வாரியம் வெளியிட்ட புதிய உத்தரவின்படி, ராஜதானி, ஷதாப்தி, துரோந்தோ, வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து முன்பணம் வசூலிக்கும் ரயில்களிலும் இனிமேல் ஐந்து வகை உணவு விருப்பங்கள் சேர்க்கப்படுகின்றன. அதாவது, சைவம், அசைவம், ஜைன உணவு, சர்க்கரை நோயாளிகளுக்கான சைவ உணவு, சர்க்கரை நோயாளிகளுக்கான அசைவ உணவு ஆகியவை பயணிகளுக்குக் கிடைக்கும். இதன்மூலம் சர்க்கரை நோயாளிகள் தங்களின் உடல் நலத்தைப் பாதுகாத்துக்கொண்டு பயணம் செய்யலாம்.