தீபாவளி ஷாப்பிங் செய்யும் போது கவனமா இருக்கலனா ஏமாந்துருவீங்க – NPCI சொல்லும் டிப்ஸ்!

Published : Oct 23, 2024, 08:36 AM IST

Safe Shopping Tips From NPCI: தீபாவளி பண்டிகை ஷாப்பிங் காலத்தில் டிஜிட்டல் பேமெண்ட் மோசடிகள் அதிகரித்துள்ளன. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இந்த தவறுகளை செய்யாதீர்கள். டிஜிட்டல் பேமெண்ட் செய்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க...

PREV
14
தீபாவளி ஷாப்பிங் செய்யும் போது கவனமா இருக்கலனா ஏமாந்துருவீங்க – NPCI சொல்லும் டிப்ஸ்!
Diwali 2024 Shopping, Safe shopping Tips From NPCI

Safe Shopping Tips From NPCI: தீபாவளி பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. மக்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஷாப்பிங்கில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்த வாரமே தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆவலுடன் உள்ளனர். எங்கும் பண்டிகை மகிழ்ச்சி நிறைந்துள்ளது. புத்தாடை, பொருட்களை வாங்குவதற்காக ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துள்ளது.

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆனால் இதையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆன்லைன் மோசடி கும்பல் காத்திருக்கிறது. பண்டிகை காலத்தில் ஷாப்பிங் செய்யும்போது டிஜிட்டல் பேமெண்ட் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

24
Safe Shopping Tips From NPCI

டிஜிட்டல் பேமெண்ட் மோசடி:

டிஜிட்டல் பேமெண்டில் UPI மூலம் நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வந்துள்ள தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), இந்த பண்டிகை மாதத்தில் டிஜிட்டல் பேமெண்ட் மோசடிக்கு எதிராக பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. டிஜிட்டல் பேமெண்ட் மோசடியை தவிர்க்க சில குறிப்புகளையும் வழங்கியுள்ளது. மோசடி கும்பல் ஆன்லைன் மூலம் எப்படி மோசடி செய்கிறது? வாடிக்கையாளர்கள் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் காரணமாக, மக்கள் பண்டிகை காலத்தில் அதிக அளவில் ஷாப்பிங் செய்கின்றனர். இந்த போட்டியில், பல நேரங்களில் பயனர்கள் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற போலி வலைத்தளங்களில் சிக்கிக் கொள்ளலாம். அதைப் பற்றி மக்கள் சரிபார்ப்பதை புறக்கணிக்கலாம். எனவே NPCI பயனர்கள் அத்தகைய விற்பனையாளர்கள் மற்றும் அவர்களின் வணிகம் நம்பகமானதா என்பது குறித்து போதுமான ஆராய்ச்சி செய்ய அறிவுறுத்தியுள்ளது.

34
Safe Shopping Tips From NPCI, Diwali 2024 Shopping

NPCI படி, பண்டிகை காலத்தில், மக்கள் ஷாப்பிங் செய்யும் போக்கு அதிகரிக்கிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் ஆர்டர் செய்ததை மறந்து விடுகின்றனர். இது ஃபிஷிங் மோசடிகளுக்கு ஆளாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், பேமெண்ட் லிங்கை 2 முறை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் போலி டெலிவரி மாற்றத்தை தவிர்க்கலாம். மேலும், பயனர்கள் தங்கள் கணக்குகளை ஹேக்கிங்கில் இருந்து பாதுகாக்க வலுவான, தனித்துவமான Password ஐ பயன்படுத்த வேண்டும்.

44
National Payments Corporation of India

ஷாப்பிங் செய்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

ஷாப்பிங் செய்வதற்கு முன் அது போலியா, நம்பகமானதா என்பதை சரிபார்க்கவும். பண்டிகை காலத்தில் 90% தள்ளுபடி, சலுகை என்று மோசடி செய்யப்படுகிறது. குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்க முயற்சிக்காதீர்கள். மக்கள் மற்றும் பயனர்கள் இதுபோன்ற தளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நீங்கள் கேட்காத அல்லது தேவையில்லாமல் வரும் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று NPCI கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த தளங்களில் அதிக தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம். ஷாப்பிங் மால்களில் வைஃபை போன்ற பாதுகாப்பற்ற பொது நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் NPCI பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories