அதிகரித்த தங்கம் விலை
2025ஆம் ஆண்டின் தொடக்கமான ஜனவரி 1ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரிக்க தொடங்கியது. முதல் நாள் கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரித்து, ரூ.7150க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.57,200 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்தது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 7,180 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 57,440 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த இரண்டு நாட்களில் ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.