தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) பல கோடி சந்தாதாரர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி வரவிருக்கிறது. தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது இருக்கும் ₹1,000லிருந்து ₹7,500 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த மாற்றம், குறிப்பாக இப்போது மாதம் ₹1,000 ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.