"கூடுதலாக, இயக்குநர்கள் கில்ஸ் ஆண்டனி ஹன்ட், இந்து சேகர் சின்ஹா மற்றும் பால் மைக்கேல் கிப்பன்ஸ் ஆகியோர் மீறல் காலத்தில் நிறுவன செயல்பாடுகளை மேற்பார்வையிட்டதற்காக தலா ரூ. 1,14,82,950 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது'' என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள், குறிப்பாக ஊடக நிறுவனங்கள் மீதான விசாரணையில் அமலாக்கத்துறையின் சட்ட நடவடிக்கை அதிகரித்து வருகிறது. சில மீறல்களுக்காக ஆகஸ்ட் 4, 2023 அன்று பிபிசி டபிள்யூஎஸ் இந்தியாவின் மூன்று இயக்குநர்கள் மற்றும் நிதித் தலைவருக்கு ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தீர்ப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.