இனி எல்லாமே ஏஐ கண்ட்ரோல்ல போய்டும்.! மொபைல் போன்கள் ஆயுசு 5 வருஷம்தான்.! எலான் மஸ்க் சொன்ன அதிர்ச்சி செய்தி.!

Published : Nov 01, 2025, 07:57 AM IST

எலான் மஸ்க் கணிப்பின்படி, அடுத்த 5-6 ஆண்டுகளில் பாரம்பரிய மொபைல் போன்கள் மறைந்து, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நியூரோலிங்க் போன்ற மூளை-கணினி இணைப்பு தொழில்நுட்பங்கள் மூலம் புதிய தொடர்பு முறைகள் உருவாகும். 

PREV
13
ரம்பரிய மொபைல் போன்கள் மறைந்து விடும்

தொழில்நுட்ப உலகின் முன்னோடியான எலான் மஸ்க், மீண்டும் உலகை அதிரவைக்கும் வகையில் ஒரு எதிர்கால கணிப்பை வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் பாரம்பரிய மொபைல் போன்கள், ஆப்கள், ஆபரேட்டிங் சிஸ்டம்கள் ஆகியவை முழுமையாக மறைந்து விடும். அதற்குப் பதிலாக மனிதர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் புதிய தொடர்பு முறைகளில் நுழைவார்கள்.

23
எதிர்காலம் ஏஐ கையில்

இன்றைய தலைமுறை பெரும்பாலான தகவல் பரிமாற்றத்தையும் பொழுதுபோக்கையும் மொபைல் ஆப்ஸ்களின் மூலமாகச் செய்கிறது. ஆனால் மஸ்க் கூறுவதுபோல், நெருங்கிய காலத்தில் “நியூரோலிங்க்” போன்ற மூளை-கணினி இணைப்பு தொழில்நுட்பங்கள் மனிதர்கள் நினைப்பதைக் கூட நேரடியாக டிஜிட்டல் உலகிற்கு அனுப்பும் திறன் பெறும். இதனால் திரை, விசைப்பலகை, அல்லது மொபைல் போன் போன்ற கருவிகள் தேவையில்லாமல் போகும்.

33
AI இயக்கும் மனித வாழ்க்கை”

மக்கள் பயன்படுத்தும் உள்ளடக்கத்தின் பெரும்பகுதி AI மூலம் தானாக உருவாக்கப்படும். செய்தி, இசை, வீடியோ, விளம்பரங்கள் அனைத்தும் தனிநபரின் விருப்பத்தைப் பொறுத்து மெய்நிகர் முறையில் உருவாகும். இதன் மூலம் தொழில்நுட்ப உலகம் “AI இயக்கும் மனித வாழ்க்கை” எனும் புதிய பரிமாணத்தில் நுழையும். எலான் மஸ்க் இதனை ஒரு தொழில்நுட்ப புரட்சியாகக் காண்கிறார். ஆனால் சில நிபுணர்கள், தனியுரிமை, தகவல் பாதுகாப்பு, மனித சிந்தனை மீது AI இன் தாக்கம் ஆகியவை குறித்து எச்சரிக்கை விடுக்கின்றனர். மொத்தத்தில், மஸ்க் கூறும் எதிர்காலம் — மனிதன் மற்றும் இயந்திரம் இணையும் புதிய யுகத்தின் தொடக்கம் எனலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories