தங்க நகை அடமானம் வைக்க புதிய விதி! ரிசர்வ் வங்கி அறிவிப்பால் விவசாயிகள் கொந்தளிப்பு!

Published : May 25, 2025, 09:02 AM IST

தங்க நகை அடமானம் வைக்க புதிய விதியை கொண்டு வந்துள்ள ரிசர்வ் வங்கிக்கு பாரதிய கிசான் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விதியை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளது.

PREV
14
Farmers Condemns RBI New Gold Loan Rules

தங்க நகை அடமானம் வைப்பதில் இந்திய ரிசர்வ வங்கி பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. அதாவது ந‌கையின் மதிப்பில் இனிமேல் 75% தான் கடன் வழங்கப்படும். நகையை அடகு வைப்பவர்கள் அந்த நகை வாங்கியதற்கான ரசீதை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 9 புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. 

ஏழை மற்றும் நடுத்தர மக்களே வங்கிகளில் அதிகம் நகையை அடமானம் வைப்பார்கள் என்பதால் ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

24
தங்க நகைக்கடனுக்கான ரிசர்வ் வங்கி புதிய விதி

இந்நிலையில், தங்க நகைக்கடன் விதிகளை கடுமையாக்குவதன் மூலம், ரிசர்வ் வங்கி விவசாயிகளின் உயிர்நாடியை நெரிக்கிறது என்று பாரதிய கிசான் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பேசிய பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் டி. பெருமாள், ''நிதி நெருக்கடி காலங்களில் விவசாயிகளுக்கு முதலில் கைகொடுத்து உதவுவது தங்கம் தான். 

ஆனாலும் அந்த தங்கத்துக்கு ரசீதை கட்டாயமாக்கியுள்ளது நடைமுறைக்கு மாறானது. இது ஏழை விவசாய சமூகத்தை மோசமாக பாதிக்கும்'' என்று தெரிவித்தார்.

34
ரிசர்வ் வங்கிக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

தொடர்ந்து பேசிய டி. பெருமாள், ''ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளுக்குப் பிறகு, விவசாய நடவடிக்கைகளுக்கு நிதி தேவைப்பட்டாலோ அல்லது மருத்துவ அவசரநிலைகள் ஏற்பட்டாலோ விவசாயிகள் எங்கு செல்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். 

ஏனெனில், வங்கிகளில் தங்கத்தை அடமானம் வைப்பதுதான் இன்றுவரை அவர்களின் முக்கிய முறையாகும். தனியார் கடன் வழங்குபவர்கள் சுறாக்கள். அவர்கள் அதிக வட்டியை வசூலிப்பார்கள்.  ஆகையால் வங்கிகள் மட்டுமே நம்பகமான தேர்வாக அமைகின்றன. ஆனால் இதிலும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது'' என்றார்.

44
விவசாயிகளை துன்புறுத்தும் செயல்

''பெரும்பாலான குடும்ப நகைகள் தலைமுறை தலைமுறையாக ஒப்படைக்கப்பட்டு, எந்த பதிவுகளையும் பராமரிக்க முடியாத நிலையில், நகைகளுக்கான உரிமைச் சான்றை விவசாயிகள் எவ்வாறு பெற முடியும்? வங்கிகள் தகுதிவாய்ந்த மதிப்பீட்டாளர்களைக் கொண்டுள்ளன.

 அவர்களின் பணி அனைத்து அளவுருக்களிலும் தங்கத்தின் உண்மைத்தன்மையை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பதாகும். எனவே, விவசாயிகளை நகைக்கான சான்றிதழைப் பெறச் சொல்வது அவர்களை துன்புறுத்தும் செயலாகும்'' என்று பெருமாள் கூறினார்.

ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செயய் வேண்டும்

மேலும் பேசிய பெருமாள், ''ரிசர்வ் வங்கியின் புதிய செயல்முறை அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். ஏனெனில் அவர்கள் அதைப் பெற தங்கள் வீடுகளிலிருந்து வெகுதூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

இந்த அளவுருக்களைக் கருத்தில் கொண்டு, புதிய ரிசர்வ் வங்கி வரைவை மறுபரிசீலனை செய்து, ஏற்கனவே உள்ள நடைமுறையைத் தொடர அனுமதிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories