பேருந்து வேகத்தில் ஒரு ரயில் வேண்டும் என எம்.பி. பி.சி. மோகன் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு சாதகமாக பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், புதிய ரயிலுக்கு அனுமதி கிடைத்த தகவலை எம்.பி.க்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வழித்தடத்தில் பல ரயில்கள் ஓடினாலும், உத்யான் எக்ஸ்பிரஸ் மட்டுமே நேரடி இணைப்பை வழங்குகிறது. சுமார் 1,136 கி.மீ. தூரத்தை இந்த ரயில் 23 முதல் 24 மணி நேரத்தில் கடக்கிறது. புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகத்தால், பயண நேரம் கணிசமாகக் குறைந்து, பயணிகளுக்கு வேகமான மற்றும் வசதியான சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயண நேரம் 16 முதல் 18 மணி நேரமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.