Gold Rate Today: வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம்.! மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டி வர்த்தகம்.!

Published : Aug 02, 2025, 09:49 AM IST

கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.9,290 ஆகவும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.74,320 ஆகவும் உள்ளது. 

PREV
13
தங்கம் விலை மீண்டும் உச்சம்

கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த ஆபரணத்தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 290 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 1,120 ரூபாய் அதிகரித்து 74 ஆயிரத்து 320 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் வெள்ளியின் விலை மாற்றம் இல்லாமல் 123 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

23
மதுரை, கோவையில் இதுதான் விலை.!

அதேபோல் மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 9 ஆயிரத்து 290 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை ஏற்ற இறக்கத்திற்கு காத்திருக்காமல் கையில் பணம் இருந்தால் அதனை தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

33
சர்வதேச காரங்கள் இதுதான்.!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் வரி விதிப்பு திட்டம், உலக நாடுகள் உடனான அமெரிக்காவின் நடப்புறவில் ஏற்படும் விரிசல் ஆகியவை சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதேபோல் அமெரிக்காவில் அதீத கடன் மற்றும் நிதி பற்றாக்குறை அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலாக மாறும் என முதலீட்டாளர்கள் நம்புவதாலும் தங்கம் மீதான முதலீட்டு அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories