சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதால் தங்கம் விலை மேலும் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் நகை கடைக்கு சென்று வருகின்றனர். அதேபோல் வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் உள்ளது.
23
சவரனுக்கு ரூ.560 சரிவு.!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ரூ,9375க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 560 ரூபாய் குறைந்து 75,000 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை மாற்றம் இல்லாமல் 127 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
33
வரும் நாட்களில் இப்படிதான் இருக்கும்.!
அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.