தவறு நேராமல் இருக்க பணம் அனுப்பவதற்கு முன் விவரங்களை நன்று சரிபார்க்கவும். குறிப்பாக, பெறுநரின் வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டைச் சரிபார்க்கவும்.
முதலில் ஒரு சிறிய தொகையை அனுப்பி சோதனை செய்யவும். இந்த வழியில், பணம் சரியாக பெறுநருக்குச் செல்கிறதா என்பதைச் சரிபார்க்கலாம். அவர் தொகை கிடைத்துவிட்டது என உறுதி செய்தால், நம்பிக்கையுடன் மீதியை பணத்தை அனுப்பலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ரூ. 10,000 அனுப்ப வேண்டும் என்றால், 10 ரூபாய் முதலில் அனுப்பவும். அது கிடைத்துவிட்டது என உறுதியானதும், முழுத் தொகையையும் அனுப்பவும்.
ஆன்லைன் பேமெண்ட் வசதியை பயன்படுத்தும்போது, சரியான விவரங்களை டைப் செய்வது உங்கள் பொறுப்பு. எனவே, பணம் அனுப்புவதற்கு சில கூடுதல் நிமிடங்கள் கூடுதலாகச் செலவானாலும் பரவாயில்லை. பொறுமையாக அனைத்தையும் சரிபாருங்கள். குறிப்பாக பெரிய தொகையை அனுப்பும்போது இது மிகவும் முக்கியமானது. எச்சரிக்கை இருந்தால் பணத்தை இழக்கும் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.