விதிகள் என்ன?
ஏப்ரல் 2025 இல், 'காற்று தர மேலாண்மை ஆணையம்' (CAQM), ஜூலை 1 முதல் நிர்ணயிக்கப்பட்ட வயதைத் தாண்டிய அனைத்து 'வாழ்நாள் முடிவு' (EoL - End of Life) வாகனங்களுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதை நிறுத்துமாறு டெல்லி அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி, டீசல் வாகனங்களுக்கு 10 ஆண்டுகள் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு 15 ஆண்டுகள் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதைக் கண்காணிக்க, பெட்ரோல் பம்புகளில் தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ANPR) கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன, இது வாகனங்களின் வயதைக் கண்டறியவும், அவற்றுக்கு எரிபொருள் வழங்காமல் இருக்கவும் உதவும். இந்த விதியை மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படலாம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டம், 1989 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம்.