கார் உற்பத்தியில் களம் இறங்கும் ISRO: அதிரடியாக குறையப்போகும் கார்களின் விலை

Published : Nov 25, 2024, 09:48 AM IST

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் ஏற்படும் செலவைக் குறைக்கும் விதமாக உள்நாட்டிலேயே கார் சென்சார்களை உற்பத்தி செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

PREV
15
கார் உற்பத்தியில் களம் இறங்கும் ISRO: அதிரடியாக குறையப்போகும் கார்களின் விலை
Car Sensor

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISROவின் தலைவர் சோம்நாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நாட்டில் ராக்கெட், விண்கலன்களுக்கு தேவையான சென்சார்கள் மிகவும் கடினமானவை. இவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் கார்களுக்கு தேவையான சென்சார்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 

25
Car Sensor

இந்தியாவில் ஓடும் பெரும்பாலான கார்களில் பயன்படுத்தப்படும் சென்சார்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை தான். ராக்கெட், விண்கலன்களுக்கு தேவையான சென்சார்களையே நாங்கள் உற்பத்தி செய்து வரும் நிலையில், கார்களுக்கு தேவையான சென்சார்களை நாங்கள் குறைந்த விலையில் உற்பத்தி செய்து கார் உற்பத்தி துறைகளுக்கு சேவை செய்ய முடியும். கார் சென்சார்களை இந்தியாவிலேயே குறைந்த விலையில் உற்பத்தி செய்வது தொடர்பாக கார் உற்பத்தி நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

35
Car Sensor

பெரும்பாலான பொருட்கள் இந்தியாவிலிருந்து எவ்வாறு பெறப்படுகின்றன என்பதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் வெளியில் இருந்து பெறப்படும் பல கூறுகளை இந்தியாவில் செய்து, உலகளாவிய பயனர்களுக்கான சில உதிரிபாகங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்பவராக மாற்றுவதில் கணிசமாக வெற்றி பெற்றுள்ளோம். தொழில்நுட்பங்களின் பரிமாற்றமும் சமமாக முக்கியமானது. 

45
Car Sensor

IT-BT துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் சென்சார்களை உருவாக்கும் யோசனை, பல EVகள் மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்துள்ள மாநில பொருளாதாரத்திற்கு உதவும். நுகர்வோரின் மிகப்பெரிய புகார் செலவு தான். இண்டிஜினிசேஷன் வாகனங்களின் விலையைக் குறைக்க உதவும். இது ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் உதவும். தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பல தொடக்க நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் இந்த யோசனையில் ஆர்வமாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

55
Car Sensor

அரசாங்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றும் ஆட்டோமேஷன் துறையைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி, “இது ஒரு நல்ல யோசனையாக இருக்கிறது. கர்நாடகா மாபெரும் முன்னேற்றம் கண்டு வரும் ஆட்டோமொபைல் மற்றும் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த இது உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories