இதன் மூலம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் மீதான இந்தியாவின் சார்பு ஓரளவு குறையக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், E20 திட்டம் திடீரென அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் அல்ல என்றும் மத்திய அரசு விளக்கியுள்ளது. 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முன்னோட்டத் திட்டம், பல ஆண்டுகளாக வாகன உற்பத்தியாளர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சோதனை அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகே படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, E20 பெட்ரோலைப் பயன்படுத்தும்போது சில வாகனங்களில் மைலேஜ் சற்று குறையக்கூடும் என்பதை அரசு ஏற்றுக்கொண்டாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இன்ஜின் செயல்திறன் மற்றும் நீண்டகால எரிபொருள் பாதுகாப்பு போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த எரிபொருளை மதிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.