
ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திரப் பெயர்ச்சிகள் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. குறிப்பிட்ட காலங்களில் இரண்டு கிரகங்கள் ஒரே இடத்தில் இணையும் போது, அவற்றின் சேர்க்கைக்கு ஏற்ப சில யோகங்களும் உருவாகின்றன. அவற்றில் சில சாதகமான பலன்களைக் கொடுக்கக்கூடியவை என்றாலும், சில யோகங்கள் சவாலான சூழ்நிலைகளை உருவாக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் சனி பகவானும் சந்திரனும் இணையும் நிகழ்வு நடைபெற உள்ளது. அக்டோபர் 23ஆம் தேதி பிற்பகல் 3.03 மணியளவில் ஏற்படும் இந்த கிரகச் சேர்க்கையின் காரணமாக விஷ யோகம் உருவாகும் எனக் கூறப்படுகிறது. இதன் தாக்கம் அக்டோபர் 25ஆம் தேதி வரை தொடரும்.
இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் பணம், வேலை, குடும்பம், உறவுகள் மற்றும் மன அழுத்தம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். குறிப்பாக இந்த 5 ராசிக்காரர்கள் அவசர முடிவுகளைத் தவிர்த்து செயல்படுவது நல்லது.
Gajakesari Yoga 2026: கஜகேசரி யோகம் முதல் தன யோகம் வரை; இந்த 6 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமாம்
விஷ யோகத்தின் தாக்கம் கும்ப ராசிக்காரர்களுக்கு சில சிரமங்களை ஏற்படுத்தக்கூடும். அக்டோபர் 23 முதல் 25ஆம் தேதி வரையிலான காலத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது எதிர்பார்த்த அளவுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்காமல் போகலாம்.
பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிப்பதுடன், சக ஊழியர்கள் அல்லது மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்புள்ளது. கடன் மற்றும் செலவுகள் தொடர்பான அழுத்தமும் ஏற்படலாம். அதிகப்படியான பணிச்சுமை மனதிலும் உடலிலும் சோர்வை ஏற்படுத்தக்கூடும்.
சில சூழ்நிலைகளில் பிறரின் விமர்சனம் அல்லது கேலி போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே, இந்த காலத்தில் கோபத்திற்கு இடம் கொடுக்காமல் பொறுமையுடன் செயல்படுவது முக்கியம்.
மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் நிதி விஷயங்களில் அதிக கவனத்தை கோரும். எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால் பணப்புழக்கத்தில் சிக்கல்கள் உருவாகலாம். ஏற்கனவே பெற்ற கடன்களை சமாளிப்பதிலும் சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பண வரவு எதிர்பார்த்தபடி இல்லாமல் போகலாம் என்பதால், தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களிலும் சில தடைகள் குறுக்கிடலாம். பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் கூடுதல் அழுத்தத்தை சந்திக்கக்கூடும்.
குடும்ப உறுப்பினர்களுடன் சிறிய விஷயங்களுக்குக் கூட கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். இதனால் மன அமைதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டு, மனதை அமைதியாக வைத்துக்கொள்வது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
சிம்ம ராசிக்காரர்களுக்கு விஷ யோக காலத்தில் பணியிட அழுத்தம் அதிகரிக்கலாம். ஒரே நேரத்தில் பல பொறுப்புகளை கையாள வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதால் மன அழுத்தமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தனிப்பட்ட உறவுகளில் வெளிப்படையான உரையாடல் அவசியம். தேவையற்ற சந்தேகம் அல்லது தவறான புரிதல்கள் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தலாம். குடும்பத்திலும் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும்.
பணத்தை கையாளும்போது அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். குறிப்பாக இந்த காலத்தில் தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் ஏமாற்றமடையலாம்.
பயணத்தின் போது கவனமாக இருப்பது அவசியம். சனிபகவானை வழிபடுவது மன அமைதிக்கும் நம்பிக்கைக்கும் உதவும் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.
ரிஷப ராசிக்காரர்கள் அக்டோபர் 23 முதல் சில விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். திடீர் செலவுகள் அதிகரிப்பதால் ஏற்கனவே திட்டமிட்டிருந்த பட்ஜெட்டில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம்.
இந்த நேரத்தில் புதிய முதலீடுகளில் அவசரப்படாமல், நிதி தொடர்பான முடிவுகளை நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. பணியிடத்தில் மேலதிகாரிகள் அல்லது சக ஊழியர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குடும்ப வாழ்க்கையிலும் சில மனக்கசப்புகள் உருவாகலாம். திருமணமானவர்கள் துணையுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் தாமதமாகக் கிடைக்கலாம்.
உடல்நலம் தொடர்பாகவும் அலட்சியம் காட்டாமல் இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை குறைத்துக்கொள்வது நல்லது. நவகிரகங்களை வழிபட்டு பிரார்த்தனை செய்வது இந்த காலகட்டத்தில் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
மகர ராசிக்காரர்களுக்கு இந்த விஷ யோக காலத்தில் உடல் சோர்வு மற்றும் ஆற்றல் குறைவு போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இதனால் அன்றாட வேலைகளை வழக்கமான வேகத்தில் முடிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நேரத்தில் முக்கிய முடிவுகளை அவசரமாக எடுப்பதை தவிர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சிறிய கருத்து வேறுபாடுகள் கூட பெரிய பிரச்சனையாக மாறாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திருமணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு சில தாமதங்கள் ஏற்படலாம்.
பணம் மற்றும் முதலீடு தொடர்பான புதிய முயற்சிகளை சிறிது காலத்திற்கு ஒத்திவைத்து, தற்போதைய நிதி நிலையை சீராக வைத்திருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில கவலைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
எனவே, இந்த காலகட்டத்தில் உடலுக்கும் மனதுக்கும் போதிய ஓய்வு அளிப்பது அவசியம். விக்ன விநாயகரை வழிபடுவதுடன், தானம் உள்ளிட்ட நல்ல செயல்களில் ஈடுபடுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
Tamil Astrology: அஞ்சா நெஞ்சமும், அதிரடி கண்டிப்பும்.. இந்த 4 ராசிப் பெண்களிடம் ஆண்களே உஷாரா இருங்க!