அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும் நேரம்! சுக்கிர யோகத்தால் பணத்தில் மிதக்கப்போகும் டாப் 5 ராசிகள்!
ஜோதிட ரீதியாக பார்க்கையில் வசதியான வாழ்க்கைக்கு காரணகர்த்தாவாக இருப்பது சுக்கிரன். ஆடம்பரம், மகிழ்ச்சி, இன்பம் என்று எல்லாவற்றிற்கும் சுக்கிரன் தான் காரணம். அப்படிப்பட்ட சுக்கிர பகவான் ஒரு ராசியினருக்கு சாதகமான இடத்தில் இருந்தால் அந்த ராசியினர் தான் வாழ்க்கையில் கோடீஸ்வரர். சுக்கிரனின் அருள் பெற்ற இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள். இவர்களுக்குப் பணத்துக்குப் பஞ்சமே இருக்காது.
ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தனித்துவமான சக்தி உண்டு. குறிப்பாக, சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், மகிழ்ச்சி, கலை, அழகு மற்றும் ராஜயோகத்திற்கு காரணியாகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அவர்களுக்குப் பணம் சம்பாத்தியமாக மட்டுமல்லாமல், சுகபோகங்கள், சொத்துக்கள், ஆடம்பர வாழ்க்கை வடிவிலும் வரும். மேலும், சுக்கிரனின் அருள் பெற்ற ராசிக்காரர்கள் இயல்பாகவே கவர்ச்சியாக இருப்பார்கள்.