நம்ம வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி நம்ம சாஸ்திரங்கள்ல நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு. அதைப் பின்பற்றினால், வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும். நிறைய பேர் இன்னைக்கும் அதைப் பின்பற்றி, நல்ல பலன்களைப் பெற்று வராங்க. ராத்திரியில் நகம் வெட்டக்கூடாது, தலை சீவக்கூடாது, சமையலறை எப்படி இருக்கணும், பூஜை அறை எப்படி இருக்கணும், எப்போ சாப்பிடணும், எப்படித் தூங்கணும்னு எல்லா விஷயத்தைப் பற்றியும் சாஸ்திரங்கள்ல சொல்லப்பட்டிருக்கு.
இந்து மதத்துல மனிதனோட ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விதிமுறை இருக்கும்போது, துணி துவைக்கிறதுக்கு மட்டும் இல்லாம இருக்குமா? துணி துவைக்கிறதுக்கும் சில விதிகள் இருக்கு. எந்த வேலையை எப்போ, எப்படி செய்யணும்னு ஒரு நல்ல நேரம், நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைச் சரியான நேரத்துல செஞ்சா, நல்ல பலன் கிடைக்கும். இது துணி துவைக்கிற விஷயத்துக்கும் பொருந்தும். தப்பான நாள்ல துணி துவைச்சா, பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும், பண நஷ்டமும் ஏற்படலாம்.