பொதுவாக கண்ணாடி உடைவது ஒரு கெட்ட சகுனமாகப் பார்க்கப்பட்டாலும், வாஸ்து சாஸ்திரத்தின்படி அது நம்மைக் காக்கும் ஒரு நல்ல அறிகுறியாகும். இது வீட்டில் இருந்த தடைகளை நீக்கி, நோய்களைக் குணப்படுத்தி, சுப காரியங்கள் நடக்க வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
பொதுவாக நம் வீடுகளில் கண்ணாடிப் பொருட்கள் அல்லது முகம் பார்க்கும் கண்ணாடி திடீரென கீழே விழுந்து உடைந்தால், நெஞ்சு படபடவென்று துடிக்கத் தொடங்கிவிடும். "ஐயோ, ஏதோ கெட்ட சகுனம் நடக்கப் போகிறது", "அடுத்த ஏழு வருடங்களுக்குத் துரதிர்ஷ்டம் துரத்தப் போகிறது" என்று பெரியவர்கள் பயமுறுத்துவது வழக்கம். ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின் படியும், சில ஆன்மீக நம்பிக்கைகளின் படியும் கண்ணாடி உடைவது முழுக்க முழுக்க கெட்ட விஷயம் அல்ல; அதில் ஒளிந்திருக்கும் சில நன்மைகளைக் கேட்டால் நீங்கள் நிஜமாகவே துள்ளிக்குதிப்பீர்கள்!அப்படி கண்ணாடி உடைவதில் இருக்கும் பாசிட்டிவான பக்கங்களைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
26
எதிர்மறை ஆற்றலை உறிஞ்சிக் கொள்ளுதல்
வாஸ்து சாஸ்திரத்தின்படி, கண்ணாடிகளுக்கு வீட்டில் இருக்கும் ஆற்றல்களை ஈர்க்கும் குணம் அதிகம் உண்டு. உங்கள் வீட்டில் ஏதேனும் பெரிய கண் திருஷ்டியோ, தீய சக்திகளோ அல்லது அதிகப்படியான எதிர்மறை ஆற்றலோ இருந்தால், கண்ணாடி அதை அப்படியே தன்னுள் இழுத்துக் கொள்ளும். ஒரு கட்டத்தில் அந்த ஆற்றலின் வீரியம் தாங்காமல், தன்னைத்தானே உடைத்துக் கொண்டு அந்த தீய சக்தியை வீட்டிலிருந்து விரட்டிவிடும். அதாவது, உங்களுக்கு வரவிருந்த ஒரு பெரிய ஆபத்தை, அந்தக் கண்ணாடி தன் மேல் ஏற்றி உடைந்து உங்களைக் காப்பாற்றியிருக்கிறது என்றுதான் இதற்குப் பொருள்.
36
தடைபட்ட காரியங்கள் துலங்கும்
சில நேரங்களில் நாம் தொட்ட காரியங்கள் யாவும் பாதியிலேயே நின்றுவிடும், வீட்டில் பணத்தட்டுப்பாடு நிலவும், அல்லது குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள் வந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், திடீரென ஒரு கண்ணாடி உடைந்தால், அதுவரை உங்கள் வீட்டைச் சூழ்ந்திருந்த அந்த "முட்டுக்கட்டை" அல்லது தடைகள் உடைந்து சிதறிவிட்டதாக அர்த்தம். இதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்களும், சுப காரியங்களும் தடையின்றி நடக்கும்.
வீட்டில் யாருக்காவது நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவு இருந்தாலோ, அல்லது மன அழுத்தம் அதிகமாக இருந்தாலோ, கண்ணாடி உடைவது ஒரு நல்ல அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. அந்த நபரைச் சுற்றியிருந்த நோய் நொடிகளின் தாக்கத்தைக் கண்ணாடி ஈர்த்துக்கொண்டு உடைந்துவிடுவதாக நம்பப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
56
கண்ணாடி உடைந்தால் நாம் செய்ய வேண்டியவை என்ன?
கண்ணாடி உடைவது நல்லது என்றாலும், உடைந்த கண்ணாடியை அப்படியே வீட்டில் வைத்திருப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே உடனே செய்ய வேண்டியவை:
உடனே அகற்றுங்கள்: உடைந்த கண்ணாடித் துண்டுகளை வீட்டில் ஒரு நிமிடம் கூட வைத்திருக்கக் கூடாது. அவை வீட்டில் உள்ளவர்களின் கால்களில் குத்தி காயத்தை ஏற்படுத்தலாம் என்பதால், கவனமாக அப்புறப்படுத்துங்கள்.
மறுபடியும் ஒட்ட வைக்காதீங்கள்: "இந்த கண்ணாடி எனக்கு ரொம்ப பிடிக்கும், லேசாகத்தான் விரிசல் விழுந்திருக்கிறது" என்று சொல்லி அதை ஒட்டி வைத்து மீண்டும் பயன்படுத்தக் கூடாது. விரிசல் விழுந்த கண்ணாடியில் முகம் பார்ப்பது எதிர்மறை ஆற்றலைத் தரும்.
பயம் வேண்டாம்: கண்ணாடி உடைந்தவுடன் "ஏதோ ஆகப்போகிறது" என்று பயந்து நடுங்காமல், "நம்மைச் சுற்றியிருந்த ஏதோ ஒரு கெட்ட விஷயம் மறைந்துவிட்டது" என்று நேர்மறையாகச் சிந்தியுங்கள்.
66
தேவையற்ற பயம் நம்மை விட்டு ஓடிவிடும்.!
அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் கண்ணாடி என்பது ஒரு உடையக்கூடிய பொருள்; நம்முடைய கவனக்குறைவால் அது கீழே விழுந்து உடையலாம். ஆனால், ஆன்மீக ரீதியாகவும் வாஸ்து ரீதியாகவும் அதற்குள் இருக்கும் இந்த பாசிட்டிவான ரகசியத்தை நாம் தெரிந்து கொள்ளும்போது தேவையற்ற பயம் நம்மை விட்டு ஓடிவிடும்.
இனி உங்கள் வீட்டில் எதிர்பாராதவிதமாகக் கண்ணாடி உடைந்தால், பதற்றமடையாமல் "கெட்டது கழிந்தது, நல்லது பிறக்கப் போகிறது" என்று மகிழ்ச்சியோடு உங்கள் கடமைகளைத் தொடருங்கள்!