ஜோதிட சாஸ்திரங்களின்படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப பலன்களை உருவாக்குகின்றன. இந்த நிலையில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசியில் மூன்று கிரகங்கள் சந்திக்க இருக்கின்றன.
சிம்ம ராசியில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரிய பகவானும், நிழல் கிரகமான கேதுவும் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளார். சுக்கிரன் கேது சூரியனின் சேர்க்கையால் சிம்ம ராசியில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் பல நன்மைகளை பெற உள்ளனர் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.