நியாயம், நேர்மை என்று வாழக் கூடிய டாப் 5 நட்சத்திரங்கள் – சொன்ன சொல்ல காப்பதில் கெட்டிக்காரங்க!

Published : Jan 29, 2026, 11:16 PM IST

Top 5 Nakshatras of People Who Keep Their Promises : பொதுவாகவே ஜோதிட ரீதியாக பார்க்கையில் 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமான குணதிசியங்கள் இருக்கும். எந்த சூழலிலும் தப்பு செய்யாமல் உண்மையாக வாழக் கூடிய நட்சத்திரக்காரர்களும் சிலர் இருக்கிறார்கள்.

PREV
13
உத்திரம்: வார்த்தை மாறாத தர்மவான்கள்!

Top 5 Nakshatras of People Who Keep Their Promises : இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் ஆவார். நவகிரகங்களின் தலைவனான சூரியனின் ஆதிக்கம் இருப்பதால், இவர்களது வாழ்வில் நேர்மையும் தர்மமும் இரு கண்களைப் போல இருக்கும். பேர், புகழ், அந்தஸ்தை விட சுயமரியாதை தான் முக்கியம் என்று வாழக்கூடியவர்கள் தான் உத்திரம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள். எப்போதும் தர்மத்தின் வழியில் நின்று மற்றவர்களுக்கு ரோல் மாடலாக திகழக்கூடியவர்கள் தான் இந்த நட்சத்திரக்காரர்கள்.

23
பூசம்: நீதியின் வடிவம்; நேர்மையின் சிகரம்!

இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் ஆவார். சனியின் ஆதிக்கம் இருப்பதால், இவர்கள் எப்போதுமே நீதிக்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் இவரை நம்பி கொடுத்தால் அதனை தார்மீக ரீதியாக தங்களது கடமையாகவே நினைப்பார்கள். இப்படி தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று பட டயலாக் வருகிறதோ அதே போன்று தான் சொன்ன வாக்கை மீறுவது என்பது இவர்களது அகராதியிலேயே கிடையாது. எந்த சூழலிலும் நேர்மை மாறாமல் வாழக்கூடியவர்கள் தான் இவர்கள்.

33
ரோகிணி: அசைக்க முடியாத உறுதி

இந்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திர பகவான் ஆவார். சந்திரன் மனோகாரகன் என்பதால், இவர்களது மன உறுதி மிகவும் வலிமையானதாக இருக்கும். ஆனால் அழகானவர்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகளில் ஒரு தெளிவும், நிதானமான தன்மையும் இருக்கும். விஜய்யின் படத்தில் வரும் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேனா என்னுடைய பேச்சை நானே கேட்கமாட்டேன் என்று வரும் டயலாக்கிற்கு ஏற்ப எடுத்த முடிவிலிருந்து பின் வாங்காத நட்சத்திரக்காரர்கள் இவர்கள் தான்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories