Oct 29 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இன்று முதல் உங்கள் பயணத்தில் புது மாற்றங்களை காணப் போகிறீர்கள்.!

Published : Oct 28, 2025, 04:42 PM IST

Today Rasi Palan : அக்டோபர் 29, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
அக்டோபர் 29, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் மன அழுத்தங்கள் நீங்கி மனதில் அமைதியும் சமநிலையும் நிலவும். உங்கள் கொள்கைகளுக்காக உறுதியாக நிற்க வேண்டிய நாளாகும். நீங்கள் முழுமையாக மாறிக் கொண்டிருக்கும் ஒரு பயணத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். எனவே முடிவை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளுங்கள். எதையும் அவசரமாக முடிக்காமல் நிதானத்துடன் செயல்படுவது வெற்றியைத் தரும்.
 

நிதி நிலைமை:

உங்கள் நிதி நிலைமை நிலையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். பெற்றோர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நிதி உதவி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நீண்ட கால சேமிப்பு திட்டங்களை தொடங்க அல்லது அத்தியாவசிய வீட்டு சொத்துக்களை வாங்குவதை கவனத்தில் கொள்ள வேண்டிய நாளாகும். ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்துவது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று குடும்ப உறவுகளில் உணர்ச்சிப் பூர்வமான நல்லிணக்கம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களிடம் நன்றியையும், பாசத்தையும் வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஆழமான புரிதலும், பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வேண்டாம் என்று சொல்ல வேண்டிய இடங்களில் தயங்காமல் ‘வேண்டாம்’ என்று சொல்லுங்கள்.

பரிகாரங்கள்:

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால் நிதி நிலைமையை மேம்படுத்த அஷ்டலட்சுமியை வணங்குங்கள். நீதி மற்றும் நல்லிணத்திற்காக துர்க்கை அல்லது இஷ்ட தெய்வமான அம்பாளை வழிபடலாம். பணம் இல்லாமல் தவித்து வரும் மூத்தவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories